வியாழன், ஆகஸ்ட் 16, 2012

மனிதவெடிகுண்டு..

பேசும் போது
வார்த்தைகளை
விழுங்கிவிடுகின்றேன்

எழுதும்போதும்
சொற்களின் இடையே
சூறாவளிதான்

உணர்வுகளை
மறைத்து மறைத்து
பழகிப்போச்சு

உள்ளே காத்திருக்கின்றது
தனலாய்
ஒரு எரிமலை

செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

மெயிலில் வந்தது

ஆயிரம் கதைகள் சொல்லும் படம்


நன்றி: பாலகோபாலன் நம்பியார்.

மாறாத தமிழ்


அதே இடம்
அதே கரும்பலகை
அதே நாற்காலி மேஜை
அதே அறை
அதே பாணி
அறியாத மாணவர்கள்
மாறிப்போன ஆசிரியர்கள்
மாறாத தமிழ்

திங்கள், ஆகஸ்ட் 13, 2012

இயற்கையின் எழில்

Danxia Landform at Nantaizi village, Gansu province of China


Out of this world: The incredibly coloured rocky landscape that looks as though it's been painted
These incredible landscapes look as if they have been painted in the sweeping pastel brush strokes of an impressionistic artwork.
But in fact these remarkable pictures show the actual scenery of Danxia Landform at Nantaizi village of Nijiaying town, in Linzhe county of Zhangye, Gansu province of China.
Formed of layers of reddish sandstone, the terrain has over time been eroded into a series of mountains surrounded by curvaceous cliffs and unusual rock formations









ஞாயிறு, ஆகஸ்ட் 12, 2012

இலக்கியவாதிகளுக்கு எது அளவுகோல்?


தினக்குரல் - வாசகர் குரல், மக்கள் குரலாக மாறி வருவது மனதிற்கு உற்சாகத்தை அளிக்கின்றது. எவ்வளவோ அவலங்களைச் சொல்வதற்கு களங்களைத் தேடியலைந்து, நிஜமாகவே மக்களின் எதிரொலிக் குரலாக ஒலித்து, தற்போது நமது சொந்தக்குரலாக மாறியிருக்கின்ற தினக்குரலையும் அதன் ஆசிரியர் மற்றும் அவர்தம் குழுவினரையும் மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன். பல சவால்களை எதிர்நோக்கி, ஆசிரியரின் அயராத உழைப்பில், அதிகவேகமாகப் பலரைச் சென்று அடைந்துக்கொண்டிருக்கின்ற ஒரு உரிமைக்குரல், நிச்சயமாக உச்சத்திற்கு வரவேண்டும் என்பதுவே என் பிரார்த்தனை.  

போகிற போக்கில், யாரோ ஒரு வாசகர், தாம் படித்த, கேள்விப்பட்ட ஒரு விவரத்தை ஆதாரத்தோடு எடுத்தியம்பிய மறு வினாடி, அதனை கவனத்தில் கொண்டு, ஆராய்ந்து, அதன் விவரமென்ன, சங்கதி என்ன, அதனால் வரும் சங்கடங்கள் என்னென்ன போன்றவற்றை மனதில் கொண்டு, எந்த கொம்பனாக இருந்தாலும், எப்பேர்பட்ட கல்வியாளராக இருந்தாலும், இலக்கியம் என்று வரும் போது, அதன் கீழ் எல்லோரும் சமம்; அதேவேளையில், சில விஷயங்களுக்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டுமென்கிற, ஞாயிறுகுரல் கதைக்குழுவின் துணிச்சலான முடிவால், நிஜமாகவே வாயடைத்துப்போனேன்.  

நம் நாட்டு இலக்கியம், உலகளவில் பேசப்படவேண்டுமென்றால், இந்தக் கெடுபிடிகளை அவசியம் கடைப்பிடித்தே ஆகவேண்டும். போட்டிக்கதையில் இருந்து `பி.கே.ஜி 6391’ என்ற சிறுகதையை நீக்குகின்றோம் என்கிற முடிவே சிறப்பானது. இதுவே நியாயமான முடிவும் கூட; அது குறித்து ஆசிரியரின் விளக்மும் மிக நன்று. யார் மனதையும் புண் படுத்தாமல், நாகரீகமாக எழுதியிருந்தார். இந்நேரம் கதாசிரியரும் புரிந்துக்கொண்டிருப்பார்.

 அக்கதையின் கரு, தழுவல் என்றாலும், கதை போக்கு அற்புதம் அழகான நடை. கைதேர்ந்த எழுத்தாளர்களால் மட்டுமே இது சாத்தியம். அந்த வகையில் எழுத்தாளர் சிறந்த கதாசிரியர், அதில் எந்த நெருடலும் இல்லை.

ஆனாலும், பிரபல எழுத்தாளரும், ஒரு பெண் வாசகியுமான (சரஸ்-பினாங்கு) பார்வையில் வந்திருந்த கடிதம் ஒன்றை பலரால் ஜீரணிக்கவே முடியாது என்பதனையும் இங்கு நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அவரின் இலக்கியப்பார்வை, சராசரி வாசக நிலையைவிட மோசமாக இருப்பதைக் கண்டு குமுறுகிறேன். இப்படி பாமரத்தனமாக எழுதிக்கொண்டு, மற்றவர்களுக்குத் தமிழ்ப் பாடம் போதிக்கும் நிலை, மற்றொரு அவலம்.  

ஒரு எழுத்தாளர்; படித்தவர், முனைவர், பல பட்டங்களைப் பெற்றவர், மொழியியல் வல்லுநர் என்றெல்லாம் கூறிக்கொண்டு, இலக்கியவாதிகளுக்கு அளவுகோல் வைப்பது, இலக்கியச்சுழலில் நடக்கும் மிக மோசமான கூத்து. அதுவே அந்த எழுத்தாளர், ஒரு மாடு மேய்ப்பவராகவோ அல்லது 'மிஷின் ஆப்பரேட்டரா'கவோ இருந்திருந்தால், போனால் போகிறது என, வாளாவிருந்து விடுவாரோ இந்த அம்மணி.?!  இலக்கிய உலகிற்கு சமாதி கட்டும் செய்கையல்லவா இது! 

படித்துப் பட்டம் பெற்றவர்கள் எல்லோரும் தலைசிறந்த இலக்கியவாதிகளா? நம் நாட்டு இலக்கியப் பார்வை எப்படிப் போகிறது பார்த்தீர்களா? உருப்படுமா இலக்கியம் இங்கே.? ஒரு படைப்பு, எழுத்து வடிவில் (இலக்கண, எழுத்துப்பிழைகள்) எவ்வளவு மோசமாக வந்திருந்தாலும், எழுதியவரின் மனதைப்பார்ப்பதுதான் இலக்கியம். எப்படியாவது மோசடிகள் செய்து பேர் புகழ் சேர்ப்பவர்கள் எல்லாம் இலக்கியவாதிகளாகிவிட முடியாது. அவர் கோடீஸ்வரரா அல்லது மிகச் சிறந்த கல்வியாளரா என்பதெல்லாம் இலக்கிய உலகிற்கு ஒத்துவராத அளவுகோல். இது போன்ற சிபாரிசுக் கடித்தை இனி வரும் காலங்களில் பார்க்காமல் இருக்க வேண்டுகிறேன்.

கல்விக்கும், இலக்கியப் பார்வைக்கும், அறிவிற்கும், எப்போதுமே சம்பந்தமில்லை என்பதனை எப்போது நாம் உணர்கின்றோமோ, அப்போதுதான் இலக்கியம் என்கிற விதை மெல்லத் துளிர்விட ஆரம்பிக்கும். அதுவரை எல்லாமும் பூஜியம்தான்.!!

இன்று ஞாயிறு குரலில் வந்த எனது வாசகர் கடிதம்

சனி, ஆகஸ்ட் 11, 2012

ஒலிம்பிக்'கில் பதக்கம்

மலேசியா - மூவின நாடு. எங்கள் நாடு.

இந்நாடு மிக சிறிய நாடு. உலக வரைப்படத்தைப் பார்த்தீர்களென்றால், ஒரு புள்ளிதான். ஆனாலும் வளமான நாடு.

பசி பஞ்சம் என்பது இல்லை எங்கள் ஊரில்.. எல்லோரும் ஓரளவு வசதியானவர்களே. ஏழைகள் இல்லை என்று நான் சொன்னால், தமிழர்களின் ஏழ்மை நிலையைக்காட்டி, அரசியல் நடத்துகிற கும்பல், இக்கருத்தின் மீது கோபம் கொள்ளலாம்.

இல்லையேல், இந்தோனீசியர்கள், பங்களாதேசிகள், தமிழ்நாட்டுக்காரர்கள் என, பலர் பலவிதமான வேலைகளைச் செய்து, லட்ச லட்சமாக பணங்களை அவர்களின்  வங்கிகளில் குவித்துக்கொண்டிருப்பது எப்படி சாத்தியம்!?.

அவர்கள் செய்யும் போது, உள்ளூர்வாசிகள் ஏழைகள் என்றால், லாஜிக் இடிக்கிறதுதானே.! சரி, நான் சொல்லவந்தது இதைப்பற்றியல்ல; இது, உலகப் பிரச்ச்சனை. விஷயத்திற்கு வருவோம்.



இந்த சிறிய நாடு தற்போது உலகளவில் பேசப்படுகிறது என்றால் அதற்குக்காரணம் லண்டன் ஒலிம்பிக்கில் நாங்கள் பெற்ற இரண்டு பதக்கங்கள்தான். ஒன்று வெள்ளி மற்றொன்று வெங்கலம்.

எங்களின் நாட்டுக்கொடி உலகரங்கில் பறக்கும் போது, ஒவ்வொரு மலேசியரும் தமது இருக்கையிலிருந்து எழுந்து நின்றோம். அவ்வளவு பெருமை.

அதுவும் லீ சோங் வே, பூபந்து அரங்கில் பரபரப்பாக விளையாடிய போது, மொழி, இன, மத வேற்றுமைகளை மறந்து எல்லோர் வீட்டிலும் பிராத்தனைகள் நடைப்பெற்றது, என்கிற செய்தி நிஜமாலுமே கண்ணீரை வரவழைத்தது. இந்நிகழ்வை ஒவ்வொரு மலேசியரும் கண்டு களித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


மறுநாள், பட்டி தொட்டியெல்லாம் இதே பேச்சுகள்தான். எல்லா பத்திரிகைகளிலும் தலைப்புச்செய்தி இதுதான்.

`ச்சே, ஆரம்பத்தில் அவர்தான் லீடிங்’, `புள்ளிகள் மிக நெருக்கமாக..’, `கிட்ட கிட்ட வந்துக்கொண்டே இருந்தார்..’, `ஐசே, தவறவிட்டாச்சே..’, `அடுத்த ஒலிம்பிக்கில், இவருக்கு வயதாகிடுமே.. இவரைப்போலவே, யார் வருவாரோ..!?’, `இவர் மாதிரி விளையாட இன்னொருவர் பிறக்கனும்..’, `என்னமாய் விளையாடுகிறார்!!’,  `காலில் அடிப்பட்டு, தேறி வந்து, நமக்கு இரண்டாவது இடம் வாங்கிக்கொடுத்ததே, பெரிய விஷயம்..’, `படு டென்ஷனா இருந்தது, பார்ப்பதற்கு..’, `நிச்சயம் தங்கமெடுப்பார் என நம்பினேன்.. பரவாயில்லை..!!’ என, இன்னமும் பல குரல்கள், குமுறல்களாக வெளிப்பட்டவண்ணமாகத்தான் இருக்கின்றது.

இதிலிருந்து விடுபாடத நிலையில், இன்னொரு இன்ப அதிர்ச்ச்சி எங்களுக்கு, ஒலிம்பிக்கில் முதல் சாதனை, நாட்டின் முதல் பெண்மணி பதக்கம் வென்றுள்ளார்.  பண்டேலேலா ரினொங், ஒலிம்பிக்கில், நீரில் குதிக்கும் சாகசப் போட்டியில், மூன்றாவது நிலையில் வென்று வெங்கலப்பதக்கம் பெற்றுக்கொடுத்து நாட்டிற்கு பெருமை சேர்த்துவிட்டார். தலைவர்கள் நெஞ்சு நிமிர்ந்து நிற்கின்றார்கள். உலக அரங்கில் எங்களின் கொடி மீண்டும் பறக்கின்றது.



பத்திரிக்கைகளிலும், ஊடகச்செய்திகளிலும் வர்ணனைகள், பாராட்டுகள் குவிகின்றன. இன்றைய முன்னணி ஆங்கிலப் பத்திரிகையில் முதல் மூன்று பக்கங்கள் இந்த செய்திகள்தாம்.

வீரர்கள் ஊர் திரும்பியவுடன், ரொக்கம், பரிசுப்பொருட்கள் விருந்து நிகழ்வுகள் என இன்னும் அதிகமான சிறப்புகள் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருப்பது, பலரை உற்சாகமூட்டுகிறது.

அடுத்த பிரேசில் ஓலிம்பிக்கில் நிச்சயம் நாங்கள் தங்கம் வெல்வோம். இந்த விஷயத்தில் நாம் ஒன்று பட்டு, ஒரே சிந்தனையில் இருந்தோமென்றால், `பாசிடீவ் வைப்ரேஷன்’ மூலமாக, நிச்சயம் வெல்வோம். 


ஒரே மலேசியா. மலேசியா போலேக். 

SATU MALAYSIA... MALAYSIA BOLEH.  


#இதையொட்டிய ஒரு கொசுறு தகவல் : இன்றைய பத்திரிகையில் வந்தது.

நேற்றைய முகநூலில் ஒரு பதிவாம்; 

‘I dare to cut my genetals if Pandelela wins tonight’ - பண்டேலேலா ரெனொங் பதக்கம் வென்றால், நான், எனது பிறப்புருப்பை அறுத்துக்கொள்கிறேன், என அரிக்கை விட்டுள்ளார் ஒருவர். அந்த பெண்மணி வென்றவுடன், அந்த பதிவையும் நீக்கியுள்ளார்.

இப்போது பலர், அவனைத் தேடிக்கொண்டிருக்கின்றார்கள், அரிவாளோடு.#







அதே அர்த்தம் தான்

புகை

கையில் சிகரெட்
காற்று
வாங்கப்போகிறார்கள்

%%%%%

தீக்கதிர் குமரேசன் அசக்..

கையில் சிகரெட்
காற்று வாங்கப்போகிறார்கள்
புகையைக் கொடுக்க.

%%%%%%

கையில் சிகரெட்
வெளியே விடுவது புகை
காற்று வாங்கப்போகிறார்கள்..!

%%%%%%

கையில் சிகரெட்
காற்று வாங்கப்போகிறார்கள்
காற்றெல்லாம் புகை..!

%%%%%%

ஆறாம் விரலாய்
சிகரெட்
காற்று வாங்கப்போகிறார்கள்..!

%%%%%%

காற்று வாங்கப்போகிறார்கள்
காற்றோடு வருகிறது புகை
கையில் சிகரெட்..!

%%%%%%

கையில் சிகரெட்
காற்று வாங்கப்போகிறார்கள்
பின்னாலே வருகிறது நோய்...!

%%%%%%%

காற்றை மாசு படுத்துகிறார்கள்
கையில் சிகரெட்’டோடு
காற்று வாங்கப்போகிறவர்கள்...!

%%%%%%%

கையில் சிகரெட்
கல்லரையை அழைத்துக்கொண்டு
காற்று வாங்கப்போகிறார்கள்...!

%%%%%%%

கையில் நோய்
புகையை கக்கிக்கொடு
காற்று வாங்கப்போகிறார்கள்...!

%%%%%%%

புகையை சுவாசித்துக்கொண்டு
காற்று வாங்கப்போகிறார்கள்
கையில் சிகரெட்...!

%%%%%