சனி, நவம்பர் 19, 2011

அறிவியல்

வேதியியல்


அறிவின் ஊற்று
ஆராய்ச்சியின் முடிவு

சோதனைக்கு பலியாகும்
சோதா ’பொந்து’ எலிகள் தாம்,
அறிவியலாளர்களின் பரிசு

வலையில் சிக்கவைக்க
எத்தனையோ சிந்தனைச் சிற்பங்கள்..
எல்லாம் ‘ருசிகண்ட பூனை’ அனுபவங்கள்
அறிவியல் வியூகங்கள்..!

’கண்ணே, முத்தே, மணியே..
ஓடி வா..
உன் வர்ண விதை வேண்டுகிறேன்..
வறண்டுக்கொண்டிருக்கும் 
என் கவிதை ஊற்று உயிர் பெற..!’

பொரியில் (பொறியியல்)வைக்கப்படும் 
வேதியியல் பாஷாணம் தான்..
இந்தக் கொஞ்சலும்
கெஞ்சலும்....

பிடிப்பட்ட எலிகளுக்கு
மின்சார அறுவைச்சிகிச்சை..

வேதியலில் (வேதனையில்)
வெளியேறும்...
’விந்து’ வே....
ஆதாரத்தின் முடிவு.!?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக