ஞாயிறு, ஜனவரி 01, 2012

இதுவும் வியாதியா?

இன்று மருத்துவ மனையில்.. 

மாமி தங்கியிருக்கும் வாட்டில், இந்த முறை எல்லோரும் மூதாட்டிகள். நுரையீரல் கன்சர், ஞாபக மறதி, விடாத வயிற்றுப்போக்கு, சாப்பிட்டதெல்லாம் வாந்தி, சிறுநீர் பிரச்சனை என..! 

முன்பு தங்கியிருந்தது இருதய பிரச்சனைகள் உள்ள வாட். இப்போ வேறு. 

அங்கு ஒரு மூதாட்டி. எதேதோ முணகிக்கொண்டு, ப்ளீஸ்,ப்ளீஸ்.. எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று சதா கேட்ட வண்ணமாக இருந்தார். நெஞ்சில் தமது கையை வைத்துக் கொண்டு..! 

அவர் சீன மூதாட்டி, கணவர் தமிழர். கணவர் இல்லை அப்போது. இந்த முணகலைக்கேட்ட நான், என்ன பிரச்சனையாக இருக்கும் என நினைத்து, என் இருக்கையை விட்டு எழுத்தேன், உடனே என் மாமி “போகாதே, அவள் திமிர் பிடித்தவள், நேற்று நம்ம குடும்ப உறுப்பினர்களை வெளியே விரட்ட, எல்லா நர்சுகலையும் அழைத்தாள்.” என்றார்.

இருப்பினும் எனக்கு மனசு கேட்கவில்லை, நோயாளியாயிற்றே... அருகில் சென்றேன், என்ன ஆண்டி, என்ன வேணும்? கேட்டேன்.

அவர் என்னை ஒரு முறை ஏற இறஙகப் பார்த்து விட்டு, நர்சைக் கூப்பிடு, நான் பேசிக் கொள்கிறேன், என்றார் கடுமையாக (அவ்வ்.. எனக்கு மட்டும் ஏன்???)

நானும் நர்சிடம் சென்று அவர் அழைக்கிறார் என்றேன், அதற்கு அந்த நர்ஸ், ஆண்டி, சாரி,அந்த பேஷண்டிக்கு ஒண்ணுமேயில்லை, அவர் அடுத்தவர் கவனத்தை ஈர்க்க இப்படித்தான் எதையாவது செய்வார். நீங்க பீல் பண்ணிக்காதிங்க, இன்னும் கொஞ்ச நேரம் சென்று மருந்துக் கொடுப்போம்’ என்றார்.

வியாதியின் பெயர் Attention Seeking syndrome.  ஆ, வியாதியா.. !? 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக