வெள்ளி, ஆகஸ்ட் 10, 2012

விசும்பலோடு....

புகை

கையில் சிகரெட் 
காற்று
வாங்கப் போகிறார்கள்

%%%%%

புகைப்படம்

பலவித ஆடைகளின் மூலம் 
புகைப்பட கருவியின் முன் 
ஒரே முகத்தைக் காட்டிக்கொண்டு
நாம்..

%%%%%%

போ..

உன் மௌனம் 
எதை வேண்டுமானாலும் சொல்லலாம்
நான் புரிந்துக்கொண்டது
போ, வேண்டாம் போ...

%%%%%%

அலசல்

ரகசியம் காப்பவர்கள் 
வளைத்துக்கொண்டால், 
அலசல் என்பது வெட்டி வேலைதான் ..

%%%%%%

காவலன்

என்னைப் போலவே
நீயும்
கண்காணித்துக் கொண்டிருக்கின்றாய்
என்னை

%%%%%%%

பொறி

தட்டுகிற சிறு பொறியை
குறித்து வைக்கவில்லையென்றால்
மறுநொடி அதே போல் 
சிந்திக்க மறுக்கின்றது
மனது..

%%%%%%%%

நீ எங்கிருந்தாலும்
வாழ்த்துவேன்
விசும்பலோடு...

%%%%%

கண்ணா
கண்ணே
கண்மணி
என் கண்மணி..

வியாழன், ஆகஸ்ட் 09, 2012

தொடரும் அர்த்தமற்ற மௌனங்கள்

இரண்டு வருடங்கள் உருண்டோடிவிட்டன.

இது, நட்பில் நாம் உழன்ற நாட்கள்/வாரங்கள்/மாதங்களின் கணக்கெடுப்பு. இனி நமது பிரிவினைச்சொல்லும் வருடங்களை நான் கணக்கெடுக்கும் நாளாக, இன்றோ அல்லது நாளையோ ஆரம்பமாகலாம். நீ என்னுள்ளே நுழைந்த நாள், எனக்கு ஞாபகத்திலேயே இல்லை. ஆனாலும், பிரிவைச் சொல்லுகிற நாள், நான் மறக்க முடியாத நாளாக அமைந்துவிடுமோ என்றெண்ணி, நீ வராத ஒவ்வொரு நாட்களையும் நான் கவனத்தில் கொண்டு, பொழுதினை நகர்த்திக் கொண்டிருக்கின்றேன்.

நீ, ஆண் நட்பு என்பதால், உனது வருகை எனக்குள் பல அர்த்தங்களைக் கற்பிக்கத் துடித்தன, இருப்பினும், நட்பின் நல்ல உதாரணமாய், தென்றலையே வீசி, காற்றில் தவழும் மகரந்த நறுமணங்களை நுகரவைத்துக் கொண்டிருக்கின்றாய், இன்னமும்.

எனது அனைத்து தீய எண்ணங்களுக்கும், எதிர்மறை சிந்தனைகளுக்கும் தீ மூட்டியது நீதான்; என்றால், நான் மிகைப்படுத்துகின்றேன் என்பாய். உண்மை அதுதான்.

பெண் என்பதால், ஆண் நட்பில் ஏற்படும் சிக்கல்களயும், படபடப்பினையும் என்னிடமிருந்து அகற்றியவனும் நீயே.

நம் நட்பு ஆரம்பித்த நாளிலிருந்து இன்றுவரை, நீ என்னை, எந்த விதத்திலும் புண் படுத்தியதே இல்லை. தவறிக்கூட உன்னிடமிருந்து எந்த ஒரு சுடு சொற்களையும் நான் பெற்றதில்லை. உனது எந்த வாசகமும் என்னைக் காயப்படுத்தியதே இல்லை. நான் சிலவேளைகளில் அன்பின் காரணமாக எதையாவது உளறிக்கொட்டினாலும், உன் கனிவான அன்பு, அந்த பொய் கோபத்தையும் இல்லாமல் செய்துவிடும்.

எவ்வளவோ பிரச்சனைகளை நாம் அலசியிருப்போம், பேசியிருப்போம். உன்னிடமிருந்து  தீர்வுகள் உடனே வராது, இருப்பினும் உன் அருகாமை அவற்றையெல்லாம் ஒன்றுமில்லாமல் செய்துவிடுவதுதான், இன்னமும் எனக்கு ஆச்சிரியம். 

எத்தனையோ பகிர்வுகளை எனக்குக்கொடுத்திருப்பாய். நல்ல வழிக்காட்டியாகவும் கைபிடித்து நகர்த்துயுள்ளாய். இருளில் நடந்த நொடிகளில் எனக்கு விளக்காய் வந்தவன் நீதானே.

இந்த இரண்டு வருடங்களில் எனது புன்னகையின் பின்னால் நிச்சயம் நீ தான் இருப்பாய். என் அழுகையின் பின்னாலும் நீதான் இருப்பாய், கண்ணீர் துடைத்தவண்ணமாக.

நீ யார் என்பது கூட, எனக்கு இதுவரையிலும் தெரியாது. யாரோ ஒருவருடைய முகம் போட்ட புகைப்படத்தைக் காட்டி, அது நீதான் என்றாய், அதற்கான சான்றுகள் பலமாக பரவலாக இருப்பினும், அது நீதானா என இன்னமும் எனக்குள் குழப்பங்கள் நீள்கிறது.

சில நொடிகளில் குழந்தையாகவும், சில வேளைகளில் துள்ளுகின்ற இளைஞனாகவும், சில பொழுதுகளில் உயர்ந்த, ஞானமுள்ள அறிவுஜீவியாகவும், பல வேளைகளில் மௌன குருவாகவும்  நீ என்னுள் இன்னமும் ஜீவித்துக்கொண்டுதான் இருக்கின்றாய்.

உன்னைக் காதலனாகப் பார்ப்பதா? நண்பனாகப் பார்ப்பதா? குருவாகப்பார்ப்பதா?, எனக்குள் நீளும் குழப்பங்களுக்கு நீயே வந்தாலும் பதில் சொலமுடியாது. ஏனென்றால் உன்னை, உன்னைவிட, நன்கு புரிந்துவைத்திருப்பவள் நான்.  

கிளர்ச்சியைத் தூண்டக்கூடிய விவரங்களும் நமக்குள் பகிரப்பட்டது; அதுவும் ஒவ்வாமையின் கூறுகளாக சிதறி சில நொடிகளில் மறைந்துப்போயின. `ஆண் நான் இப்படித்தான் என்று நீ அடம்பிடித்தாலும், பெண்ணான எனது ஒவ்வொரு உணர்விற்கும், நீ கொடுத்து வந்த சுதந்திரமும்  மரியாதையுமேதான்; இன்று நான், உன்னை உச்சத்தில் வைத்து பூஜிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

புகைப்படத்தில் உள்ள உன் முகத்தைக்கண்டு, என்னால் யூகிக்கவே முடியவேயில்லை.! இத்தனை நாள் என்னோடு பேசியது நீதானா?, யாரோ ஒருவரின் பெயரில், யாரோ ஒருவர் வந்திருக்கலாம்; என்கிற, எனது சந்தேகத்திற்கு உரமிடுவதைப்போல் உள்ளது உனது இந்த, தொடரும் அர்த்தமற்ற மௌனம்.

என்னுடன் நீ நெருங்க நினைத்த போதெல்லாம், நான் சற்று விலகிச்சென்றது, மரியாதைக்காகவே என்றாலும், உன் வருகையையும் அருகாமையையும் ஆரம்பத்தில் நான் அவ்வளவாக விரும்பவில்லை என்பதுதான் நிஜம். உனக்கு என்னிடம் ஏன் இந்த தேவையில்லாத உறவு, என்று கூட பலவேளைகளில் சலித்துக்கொண்ட, அலட்சிய நிகழ்வுகளையும் அசைபோடாமல் இல்லை இந்த மனது.

பூகம்பமோ புயலோ எதாவதொன்றைக் கொடுத்து விட்டுத்தான் செல்லப்போகிறாய், என்கிற எனது மோசமான எச்சரிக்கை மனதும் சமிக்ஞை கொடுத்தவண்ணமாகவேதான் இருந்தது. அந்த உணர்வோடு அப்படியே நான் விலகிச்சென்றிருந்தால், என்னைச் சுற்றி, சுற்றங்கள் இருந்தும், இந்த தனிமைச் சூழலில் சிக்கித்தவிக்கின்ற அவல நிலை வந்திருக்காதே.!

சரி பரவாயில்லை. வரும் போது, உன்னை முழுமனதோடு வரவேற்காத நான், நீ போகும் போது மட்டும் புலம்புவது அழகல்லவே.!

வாசகர்களின் கவனதிற்கு – நாங்கள் இதுவரையில் தொலைப்பேசியில் கூட பேசியதில்லை, இருவரின் கைப்பேசி எண்களும், இருவரிடமும் இருக்கும் பட்சத்தில்...! கண்டிப்பாக பார்த்ததும் இல்லை- வெறும் மெயில் தொடர்புதான் இந்த நட்பு. முகநூல் சகவாசம். 

ஆனாலும் அவனை நான் மனதார நேசிக்கின்றேன். அவன் என்னை விட்டுச்சென்றாலும், என்னிடம், அவன் விட்டுச்சென்ற பண்புகளை நான் விடேன்.   



புதன், ஆகஸ்ட் 08, 2012

What is going on everywhere? (News view)

Treatment goes awry

women has blisters on private parts after hair removal sessions.

39 year old woman ended up having blisters, redness and swelling on her private parts and now has difficulty walking, sleeping and urinating.

"the centre told me they had carried out the treatment many times including models" she said.
she said she paid RM3,500 for two years at the popular hair removal outlet. The initial sessions went well but about five six sessions, a new therapist took over and increased the intensity of the treatment.

'' I felt sharp pain during the treatment but told to applying ice cubes to cure the pain.

now she is in specialist centre to cure, but the results shows she had suffered second degree burns on her private parts and the treatment would cost RM35k - RM55k with no guaranteed chance to recovery.

The centre and the therapist later apologised to her.

Now the case at MCA public Services - Malaysian famous problem solver Mr. Michael Cheong.

      

செவ்வாய், ஆகஸ்ட் 07, 2012

கோரப்பல்

உயிரற்று
சவபெட்டிக்குள் நுழைந்து
புதைக்குழி நோக்கிச் செல்கிறது
உன் மீதான
நான் கொண்ட
காரசார விமர்சனம்

பேயாக சாத்தானாக
எப்போது வேண்டுமானாலும்
வரலாம்
தலை முடி விரித்து
கோரப்பல் முளைத்து..

திங்கள், ஆகஸ்ட் 06, 2012

பாலும் வேண்டாம்

எனக்கு, நீண்ட நாட்களாக ஒரு பிரச்சனை. 

அடிக்கடி வயிற்றில் காற்று புகுந்து வயிறு அப்படியே உப்பிக்கொள்ளும். தர்மசங்கடமாக இருக்கும். சாப்பிட்டாலும் பிரச்சனை சாப்பிடாவிட்டாலும் பிரச்சனை. எப்போதும் பெரிய பெரிய ஏப்பம் வந்துக்கொண்டே இருக்கும். கம்பனி கிளினிக்குச் சென்றால், அதே கேஸ் ஸ்ட்ரீக் மருந்து மாத்திரைகள். வாழ்க்கையே வெறுத்துப்போனது.

சனிக்கிழமை ஒரு அற்புதமான கைராசிக்கார அலோபதி மருத்துவரை சந்தித்தேன். 
முழுமையான மருத்துவ பரிசோதனைக்குப்பிறகு - பிரச்சனை என்ன என்பதனையும் சொல்லி- இனி நான்....

புகை பிடிக்கக்கூடாது
மதுபானங்களைத் தொடக்கூடாது

முக்கியமான ஒன்று -

பால் மற்றும் பால் பலகாரங்களைச் சாப்பிடக்கூடாது.

ஆச்சிரியம் - இரண்டு நாட்களாக நான் ஆரோக்கியமாக இருக்கின்றேன் - பால் பொருட்களைச் சாப்பிடாமல்.
வெறும் கருப்பு காப்பிதான்.



முகநூலில் பதிவேற்றினேன் இதை...

(பால் என்பது தனது கன்றுக்குட்டிக்காகத் தாய் மாடு சுரப்பது. அதைக் கறந்து மனிதர்களின் அன்றாட உணவாக்கியதும், அது மிகப் பெரியதொரு தொழிலாக்கப்பட்டிருப்பதும் இப்போதைக்குத் திருதத முடியாத கொடுமை. காபி, டீ ஆகியவற்றைக் கண்டுபிடித்த நாடுகளிலும், அவை ப
ரவியுள்ள பெரும்பாலான நாடுகளிலும் பால் கலப்பின்றிதான் எடுததுக்கொள்கிறார்கள். நம்ம சனங்கள்தான் பால் கலந்து ப ருகுகிற பழக்கத்தைக் கண்டுபிடித்தார்கள். உண்மையில் கருப்புக் காபியும் டீயும் பல மருத்துவ பலன்களை அளிக்க வல்லவை. அவற்றில் பால் கலக்கப்படும்போது அந்த பலன்கள் எல்லாம் அடிபட்டுவிடுகின்றன...  தீக்கதிர் - குமரேசன் அசக் அவர்களின்   பின்னூட்டம் இது - )

ஞாயிறு, ஆகஸ்ட் 05, 2012

விளங்குமா இலக்கிய உலகம்..


எங்க ஊர் பத்திரிகைகளை இப்போதுதான் படித்து முடித்தேன்.

சென்ற வாரப் பத்திரிகையில் வெளிவந்திருந்த ஒரு போட்டிக்கதை - காப்பி என்று நாடு முழுக்க உள்ள வாசகர்களால் நிறுபனமாகி விட்டது. readers digest யில் வந்த பிரபலமான உண்மைக் கதை அது.

கதை தேர்வுக்குழு அக்கதையை, போட்டியில் இருந்து நிராகரித்தும் விட்டார்கள். ஸ்டோரி ஓவர். ஆனால் இன்று பத்திரிகையில் ஒரு பிரபலமான, தமிழில் பாண்டித்துவம் வாய்ந்த ஒரு பட்டதாரி ஆசிரியை, பிரபல எழுத்தாளரும் கூட, கேள்விக் கேட்கிறார் இப்படி...!

*இந்த கதை இப்படி ஒரு குற்றச்சாற்றிற்குப் பலியாகுமென்று நான் நினைக்கவேயில்லை.

*இதை குறை கூறிய வாசகர்களின் கருத்து அபத்தமானது.

*ஒரு கருவைக்கொண்டு எத்தனை சினிமா பாடல்கள் வருகின்றன! அவற்றையெல்லாம் தழுவல் என்று சொன்னால், சினிமா உலகம் ஏற்றுக்கொள்ளுமா?

*ஆதாரமற்ற நிலையில் விசாரிக்காமல் தீர்ப்பு கூறுவது நியாயத்திற்கும் தர்மத்திற்கும் ஏற்புடையதல்ல.

*மேலும் அக்கதையை எழுதியவர் சாமனியமானவர் அல்ல. அவர் ஒரு முனைவர், குறிப்பாக மலாய் மொழி இலக்கியத்துறையில் பி.எச்.டி பட்டதாரி. இரண்டு மொழிகள், மலாய் மற்றும் தமிழ் சிறுகதைகளை ஆய்வு செய்பவர். அவர் நிறைய போட்டிகளில் பரிசும் பெற்றவர். ஆக அவரின் சிறுகதை தழுவல் என்பது நியாயமற்ற குற்றச்சாட்டு.

*அவர் எழுதிய அக்கதை முழுக்க முழுக்க உண்மைச் சம்பவங்களை பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது. காரின் எண்களும் நிஜமே.

*ஒரு கதையை ஒரே கோணத்தில் விமர்சிப்பவர்கள் பலர். ஆனால் படைப்பாளிகள் அப்படியல்ல. ஒரு கருவில் பலதரப்பட்ட கதைகளை உருவாக்கும் வல்லமை பெற்றவர்கள்.

*ஆக, அவரின் கதை தழுவலாக இருக்கவே முடியாது...!

மலேசியாவில் இலக்கியம் வளருமா? `பிரபல’ முத்திரை குத்தப்பட்ட எழுத்தாளர்கள்/இலக்கியவாதிகள் செய்யும் கூத்துகளால்?

Kumaresan Asak 
வாழ்க்கையின் தழுவல்தான் இலக்கியம். வாழ்க்கையின் ஒரு கூறாகவும் இலக்கியம் இருக்கிறது. ஆகவே, வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்து ஒரு படைப்பு உருவாவதைப் போல ஒரு இலக்கியப் படைப்பின் தாக்கத்திலிருந்தும் இன்னொரு படைப்பு உருவாக முடியும். ஆனால் அது அப்படிப்
பட்ட தாக்கத்தின் விளைவாக இருக்க வேண்டுமேயன்றி அப்படியே சுட்டு, பெயர்களையும் நிகழிடத்தையும் மட்டும் மாற்றி, சில சொல்லாடல்களை செருகி, தனது சொந்தச் சரக்காகத் தருவது மோசடி. நீங்கள் குறிப்பிடுகிற கதை எப்படிப்பட்டது? படித்ததன் தாக்கத்தில் வந்ததா? படித்ததைத் தூக்கிக்கொண்டு வந்ததா?  (தீக்கதிர் -  குமரேசன் அசக்)

 

அவருக்கு நான் கொடுத்த பதில்.


நன்றி சார் கருத்திட்டமைக்கு. ஒரு பக்க கதையை அவர் பாணியில் மிக அழகாக மற்றி இறுதியில் அப்படியே காப்பி. அந்த கதையில் பெண் குழந்தை.இந்த கதையில் ஆண் குழந்தை. அதான் வித்தியாசம். கதையைக் கொண்டு சென்ற விதம் அற்புதம். பாரட்டலாம். மொழி முனைவராச்சே எழுத்துக்கலைக்குச் சொல்லவா வேண்டும்.! 






வியாழன், ஆகஸ்ட் 02, 2012

எனக்குள் சில ரகசியங்கள்..

எனக்குள் சில ரகசியங்கள் இருக்கின்றதாம்!

எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள். ஒளிவு மறைவு இல்லாமல் எல்லாவற்றையும் பகிர்பவள் நான். இருப்பினும் என்னை நெருங்குபவர்கள், என்னிடம் பழகியவர்கள், என்னை நன்கு தெரிந்தவர்கள் என, எல்லோரும் என்னிடம் எதையோ  தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.!?

தொடர்ந்து என்னோடு நட்பாக இருப்பவர்களுக்குத்தெரியும், நான் யாரிடமும் எதையுமே மறைப்பதில்லை. என் நான்கு சுவர் நிகழ்வுகளையும் ரகசியங்களையும்  நட்பு வட்டங்களோடு பகீரங்கமாகப் பகிர்பவள், நான்.  

தினம் தினம், உடனுக்குடன், மனதில் தோன்றியதை, மனதார சொல்லி, மன சங்கடங்களையும், மகிழ்வு, பூரிப்புகளையும் எதாவதொரு சந்தர்ப்பத்தில், சதா, வெளிப்படுத்திய வண்ணமாக இருப்பவள்தான் நான். 

இதையும் தாண்டி, இனம்புரியாத தேடலை சந்தேகங்களாக என்னுள் விதைத்து விட்டுச்செல்லும், இந்த விந்தையான வினாச் சுற்றம், எதற்காக, என்னிடம் இல்லாத ஒன்றை , ரகசியமென்று முத்திரை குத்தி என்னை குழப்பிக்கொண்டிருக்கின்றது.!??

என்ன ரகசியம், எனக்கே தெரியாமல், எனக்குள்?  இன்று மட்டுமல்ல, நான் பூப்பெய்தியா நாள் தொட்டு, விடாமல் என்னை துரத்திப் பதம் பார்க்கும் வினா இது.!  

எனக்குள் எதோ ரகசியம் இருப்பதாக...

நான் பள்ளியில் பயில்கின்ற போது, என் புத்தகப்பையை அடிக்கடி திறந்துப்பார்ப்பார் அம்மா. என்னமோ செய்கிறாளே, குடும்ப மானத்தை வாங்கிவிடுவாளோ என.!

காலெஜ் காலகட்டத்தின் போது, பஸ் ஸ்டாப்பில் ஒளிந்துப்பார்த்தார் மாமா. நான் யாரிடம் பேசுகின்றேன், எவரோடு நட்பு வைத்துள்ளேன். என்ன மாதிரியான நட்புகள் எனக்கு, என்பதனை..!

நான் செல்லும் இடங்களுக்கெல்லாம் வேவு பார்க்க ஆள் அனுப்பினார் சித்தப்பா. இல்லாத பொல்லாத சண்டையெல்லாம் வந்துள்ளது சித்தப்பாக்களால். அடிப்பதற்குக்கூட தயாராய் இருந்தார்கள். இல்லாத ரகசியத்தை சொல் சொல் என்று, பலமுறை..

எனக்குள் எதோ ரகசியம் இருப்பதாக..

என் தோழிகள் கூட என்னைத் துருவிய வண்ணம். நல்ல ஆடை உடுத்தியிருக்கியே, யார் வாங்கிக்கொடுத்தா? புதிய கைப்பேசி; பாஸ் வாங்கிக்கொடுத்தாரா? ஆளே மாறிட்ட, என்ன சங்கதி? என, என்னுள் எதையோ தேடியபடி என்னை அணுகும் என் நட்புகள்.

என் அருகிலேயே இருந்தும், என்னிடம் தினமும் பேசுகின்ற என் தங்கைகள் தம்பிகள் கூட, எனது முகநூலின் பதிவுகளையும், வலைப்பூ பதிவுகளையும் சதா நோட்டமிடுகின்றார்கள். யாரிடமாவது நான் வரம்பு மீறுகின்றேனா என்பதனைக் கண்காணிக்கும் பார்வையாளர்களாகவும்.. சந்தர்ப்ப சூழ்நிலையின் போது, ஆதரங்களோடு கருத்துகளை வைப்பதற்காகவும், `ஆமாம், செய்தாள், நான் சாட்சி’ என்கிற வசனங்களை ஒப்புவிப்பதற்காகவும் இவர்களும் என்னோடு பயணித்து, என் ரகசியங்களை ஆராய்ந்துக் கொண்டிருக்கின்றார்கள்.

எப்போதாவது ஒரு நாள் அழைக்கும் என் பால்ய நண்பர்கள் கூட, எப்படி இருக்கின்றாய்; என்பதனைக் கேட்ட மறு வினாடி, பழய நட்புகளோடு இன்னும் பழக்கமிருக்கா, அவன் இன்னும் அழைப்பானா?  உன்னைப்பிரிய முடியாமல் அழுதானே..! இப்போதும் அழுவானா? மீண்டும் சந்திக்கப்போவதாகச் சொன்னாயே? எத்தனை முறை??? என்பதனை ஆரயவே  துவங்கிவிடுகின்றனர்..!

எனக்குள் எதோ ரகசியமிருப்பதாக...

பெருமதிப்பிற்குரிய என கணவனும், என்னிடம் எதையோ தேடிக்கொண்டிருக்கின்றார்.. தொலைப்பேசி அழைப்பில் இருப்பது ஆணா அல்லது பெண்ணா என்பதனையும்.. எனக்கு வந்திருக்கும் குறுந்தகவல்கள் என்ன மாதிரியானவை என்பதனையும், முகநூலில் யாரோடு அதிகம் பேசுகின்றேனென்றும், வெளியே சென்று வந்தால், யாரோடு? எவரோடு? ஏன்? எதற்கு? என்பதனையும், பெண்களின் நட்பு கூட எதோ ஒரு வித உறவில் முடிவதாக சினிமா மற்றும் ஏடுகள் சொல்வதால், அந்த நட்புகளையும் விளக்கெண்ணெய் கொண்டு ஆராய்வதையும், தொடர்கதையாய்..

எனக்குள் ஏதோ ரகசியமிருப்பதாக..!!?

அக்கம் பக்கத்திலுள்ளவர்களும் சந்தேகிக்கத் துவங்கியுள்ளார்கள், `என்ன புதிதாக சமஞ்ச பெண்மாதிரி வீட்டுக்கொள்ளேயே இருக்கின்றீர்கள்!? என்னதான் செய்வீர்களோ, உள்ளேயே புகுந்துக்கொண்டு..? நேற்று யாரிடமோ அதிக நேரம் போனில் பேசினீர்களே; யாரோடு? அம்ம்மா.. எவ்வளவு சத்தமான சிரிப்பு அது? என்ன ஜோக்.. என்னிடமும் சொல்லலாமே..!? என ஆராயத்துவங்கியுள்ளார்கள்.

என்ன ரகசியம்?

என்னிடம் எதோ ரகசியமிருப்பதாக..!?

இப்போது நானும் தேடத்துவங்கியுள்ளேன், என்னிடம் உள்ள அந்த ரகசியங்கள் என்ன என்பதனை..!