செவ்வாய், செப்டம்பர் 25, 2012

சிலவேளைகளில்....

சிகரெட் மற்றும் பலவிதமன மதுபானங்களை ஏற்றிச்சென்ற பெரிய சரக்கு லாரி ஒன்றும், இருவர் பயணித்த ஒரு காரும் சாலையில் மோதி விபத்துக்குள்ளாயின. பயங்கரமான சாலை விபத்து. காலையிலேயே பத்திரிகையின் முதல் பக்கத்தை அலங்கரித்த செய்தி அது. காரில் இருந்த இருவரும் அங்கேயே அகால மரணம். லாரி சாலையில் தடம் புரண்டதால் லாரி ஓட்டுனருக்கு கடுமையான காயம். பார்வையாளர்களும் சாலையில் பயணிப்பவர்களும் முதலுதவி செய்வதற்குப் பதில், உடையாத மதுபான பாட்டல்களையும், சிதையாத சிகரெட் பக்கெட்டுகளையும் சேகரிக்கும் மும்முரமான பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்களின் புகைப்படத்தை பத்திரிகையில் போட்டு, இச்செய்கையையும் கோடிக்காட்டியிருந்தார்கள்.

%%%%%%%%%%

மும்பையில் நடந்த சம்பவமாம்.. பத்திரிகையில் படித்தேன். தமது பதினைந்து வயது மகளை, கணவன் புரிந்த கள்ளக்காதல் விவகாரத்திற்கு  சாட்சியாக, பெற்ற தாயே அழைத்துச் சென்றுள்ளார். இதைத் தாங்கிக்கொள்ளாத அந்த மகள், சாட்சி சொல்லி வீடு திரும்பியவுடன் விஷமருந்தி, தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டாளாம். . கொடுமை.

%%%%%%%%%%%%

சாலையின் செல்லுகையில், டோல் சாவடியின் அருகில் ஒரு விபத்து. கண்ணால் பார்த்த நிகழ்வு இது. குளிர்பான டின்களை பெட்டி பெட்டியாக ஏற்றிச்சென்ற லாரி அப்படியே தரம் புரண்டது. டின்கள் சாலையில் உருல்கின்றன. உடைந்த டின்களில் இருந்து பானங்கள் ஆறாய் பெருக்கெடுத்து ஓடுகிறது. உதவிக்கு வந்த  Tow Truck Service ஆட்கள், முட்டை மூட்டையாக உடந்து நசுக்கிய காலி டின்களோடு, பானங்கள் உள்ள புதிய நசுங்காத டின்களையும், குப்பைகளை அப்புறப்படுத்துதல் போல், அபேஸ் செய்துக்கொண்டிருந்தார்கள். பொதுமக்களை நெருங்க விடாமல். எப்படி கண்டுபிடித்தேன் என்றால், காலி டின்கள் கனமில்லாமல் இருக்கும் தானே..! ஆனால் இவர்கள் டின்களின் மூட்டையைத் தூக்க முடியாமல் தூக்கி, அவர்களின் டிராக்கில் வைத்துக்கொண்டிருந்தார்கள்.  தேன் எடுக்கச்சென்றவன் புறங்கையை நக்காமல் வருவானா என்ன.!

%%%%%%%%%%%

இன்று இண்டர்வியூவிற்கு ஒரு இளைஞன் வந்திருந்தான். அவனுக்கு வயது முப்பத்திரண்டு. அவனுடைய அம்மாவிற்கு வயது நாற்பத்திரண்டு. எப்படி? எனக்கு மண்டையில் நண்டு ஊறுகிறது. ஒருவேளை இரண்டாவது அம்மாவாக இருப்பாரோ..!? முடியாதே, பாரத்தில் நிஜமான தாய் தந்தையர் பற்றிய தகவல்கள்தானே போடவேண்டும். கேட்கவில்லை. எதுக்கு வம்பு?

%%%%%%%%%%%%

பெண்கள் ஒன்று சேர்ந்தால் எதாவது பேச்சு வரும். இன்று ஒரு பேச்சு வந்தது எங்களுக்குள். அதாவது எங்களின் செக்கரட்டரி ஒருவள், வயதிற்குத்தகுந்த உடல் இல்லை. உடலை சின்ன பெண் மாதிரி சிக்கென்று வைத்திருப்பாள். அழகாகவும் இருப்பாள். இன்று அவளிடம் இதுபற்றி பேச்சு கொடுக்கையில், அவள் ஒரு யுக்தியை எங்களுக்குக் கற்றுக்கொடுத்தாள். அதாவது, நேராக நின்று, இரண்டு கைகளையும் ஒன்றாகக்கூப்பி, எவ்வளவு உயரத்திற்கு தூக்கமுடியுமோ அவ்வளவு உயரத்திற்குத் தூக்கவேண்டும். உடல் நேராக இருக்கவேண்டும். மூச்சை மெதுவாக இழுத்து விடவேண்டும். அப்படித்தூக்கும்போது, கால்களும் நுனி பாதத்தில் நிற்க வேண்டும். இதை எங்கு எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.  கிடைக்கின்ற ஓய்வு நேரங்களில் எல்லாம் இதேபோல் செய்துக்கொள்வாளாம். தனியாக உடற்பயிற்சி மேற்கொள்வதைவிட இது எனக்குக் கைகொடுக்கிறது என்றாள். இதுபோல் தினமும் செய்வதால், மார்பகங்கள் கூட வயதின் காரணமாக ஏற்படும் தளர்ச்சியிலிருந்து விடுபட்டு, எப்போதுமே firm ஆக இருக்குமாம். சொல்லி வாய் மூடவில்லை, பக்கத்தில் இருந்த ஒருவள் தள்ளாடித்தள்ளாடி முயன்றுக்கொண்டிருந்தாள்.

%%%%%%%%%%%%%%%

விளக்குமாறு வாங்குவதற்குக்கூட சூப்பர் மர்கெட் தான் போகணும் போலிருக்கு. எல்லாமும் சூப்பர் மார்கெட் மயமாக இருப்பதால், அவசரத்திற்கு விளக்குமாறு வாங்கச்சென்றால், விடாதே அடிமை சிக்கிவிட்டது என்பதுபோல் அதன் விலையை இரண்டுமடங்காக ஏற்றி விற்கின்றார்கள் மளிகைக் கடைக்காரர்கள். நேற்று வாழைப்பழம் கிலோ 4.50காசிற்கு வாங்கிவந்தேன். அதே கடையில்... :((

திங்கள், செப்டம்பர் 24, 2012

மூஞ்சுறு

விரல்கள் கிடைக்காத
பொழுதுகளில்
விறகுகளை
துளையிட்டுச் செல்கின்றன
சுவையறியா
மூஞ்சுறுகள்..

ஞாயிறு, செப்டம்பர் 23, 2012

பாக்கியம் அக்கா மன்னியுங்கள்.

வாசகர் விழா.

பாலகோபாலன் நம்பியார் அவர்களின் தலைமையில் போர்ட் கிள்ளான் திருவள்ளுவர் மண்டபத்தில் சென்ற ஞாயிறு, மதியம் தொடங்கி இரவு வரை மிகச்சிறப்பாக நடந்தேறிய ஒரு அற்புத விழா பற்றி சொல்லியே ஆக வேண்டும்.


விழாவின் கருப்பொருள் ஒழுக்கமே விழுப்பம். கருப்பொருளுக்கேற்ப, நிகழ்விலும் ஒரு ஒழுங்குமுறை கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கெல்லாம்  ஒரே மாதிரியான ஆடைகள், பேச்சாளர்கள் மேடையில் முழங்குவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளலாம் என்கிற நேர ஒதுக்கீடு, நிகழ்ச்சி நிரல் அறிக்கையிலேயே அச்சாகி இருந்தது. சீரான வழிநடத்தல், சோர்வில்லாத அறிவிப்புப்பணி, அற்புதமான நடனங்கள். நடனங்களைப்பற்றி சொல்லியே ஆகவேண்டும், பிரமாண்டமான நிகழ்சிகளில் அரங்கேறும் கலாச்சார நடனங்கள் போல், முழுமையாக நடன உடைகள் ஆபரணங்கள், முக ஒப்பனைகளோடு மிக அற்புதமாக அரங்கேறிய நடனங்கள். நன்கு பயிற்சி பெற்று, குழுவாக இயங்கி, கவனங்கள் சிதறாமல், ஒரே சீராக அபிநயம் பிடித்து, நடனங்களை வழங்கி நிகழ்ச்சிக்குச் சிறப்புச் சேர்த்த அவர்களைப் பாராட்டாமல் இருக்கவே முடியாது. நடன  ஆசிரியருக்கு ஒரு சபாஷ் இவ்வேளையில். நமது கலை கலாச்சாரங்களை வளர்த்து வாழவைத்துக் கொண்டிருப்பவர்கள்  இவர்களைப்போன்ற  நல்ல  கலையார்வம் கொண்ட நடன ஆசிரியர்கள்தான். வாழ்த்துகள் ஆசிரியர்களே.


எல்லாமே இலக்கியத்தனமாக இருந்தாலும் சோர்வாகிவிடுமென்பதால், இடையிடையே பலவிதமான கலைநிகழ்ச்சிகளும் குதூகலிக்கவைத்தன.

இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால், ஸ்கைஃப் வழி, தமிழ் நாட்டு பிரமுகர், இலக்கியவாதி, இதழாசிரியர் கீழாம்பூர் சிவசுப்ரமணியன் அவர்களை தொடர்புக்கொண்டு சில கேள்விகளின் வழி அவர் எங்களோடு பேசியதுதான். இது எனக்கு இன்ப அதிர்ச்சி. மற்ற நிகழ்ச்சிகளில் செய்துள்ளார்களா என்பது தெரியவில்லை, ஆனாலும் இந்த முயற்சி வரவேற்கக்கூடிய ஒன்று. வெளிநாட்டுப் பிரமுகர்களை அதிக செலவில் வரவழைத்து உரையாற்றச்செய்வதை விட இப்படி ஒரு யுக்தி, புதுமையாகவும் சிறப்பாகவும் இருந்தது. உலகத்தமிழர்கள்  எல்லோரும் தமிழால் ஒரே குடையின் கீழ் இணையத்தின் வழி கைகோர்த்து நிற்கின்றோம் என்பதில் பெருமகிழ்ச்சிதான். தொழில்நுற்ப வளர்ச்சியின் உச்சத்தைக்காட்டும் இவ்வரிய வாய்ப்பிலிருந்து மலேசியர்களான நாமும் விடுபட்டுவிடாமல் இருப்பது இன்னொரு மகிழ்ச்சியே.

அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் ஒன்று, இலக்கியப்பத்திரிகை நடத்தும் உங்களின் கலைமகள் இதழுக்கு யாரெல்லாம் எழுதலாம்? 

அவருடைய பதில், யாருக்கெல்லாம் தாம் சரியாக எழுதுகிறோம் என்கிற எண்ணமும், தம்முடைய படைப்பின் மீது முழு நம்பிக்கையும் இருக்கின்றதோ, அவர்களெல்லாம் தாராளமாக படைப்புகளை அனுப்பலாம். என்றார். பதில் எவ்வளவு நாசுக்காக இருக்கின்றது பார்த்தீர்களா.! எல்லோரும் நம்பிக்கையோடுதான் படைப்புகளை அனுப்புகிறோம். ஆனால் கலைமகள், நந்தவனம், தீராநதி, காலச்சுவடு, குமுதம் போன்ற தமிழ் நாட்டு இலக்கிய இதழ்களில் நமது படைப்புகள் வருவதென்பது சாதாரணமா.!?

பாலகோபாலன் நம்பியார் நிகழ்ச்சிகளை அழகாக வழிநடத்துவதில் வல்லவர். இவருக்குப்பின், அரசாங்கத்தால் பதிவுபெற்ற இவ்வாசக இயக்கத்தை சரியாக வழிநடத்துபவர் யார் என்பது தான் அன்றைய நிகழ்வில் பலரின் உள்ளகிடங்கின் கேள்விக்குறியாக இருந்தது வினா. அள்ளிக்கொடுக்கவும், நிகழ்வுகளுக்கு முதுகெலும்பாக நிற்கவும், கொடைநெஞ்சர் கிள்ளார் ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் ஆலயத் தலைவர் சங்கபூஷண் சித.ஆனந்தகிருஷ்ணன் எப்போதுமே இவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் பட்சத்தில், நிகவுகளை சரியான முறையில் வழி நடத்துவதற்கு திரு பாலகோபாலன் நம்பியாரைத் தவிர வேறொரு நபர் இன்னும் உருவாகவில்லை என்கிற அரசல் புரசல் பேச்சுகள் கூட செவிகளில் விழுந்தனவே. காத்திருப்போம். இதற்குக் காலம்தான் பதில் சொல்லும்.

வாசக இயக்கங்களைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும். ஒரு காலத்தில் மலேசிய தமிழ் பத்திரிகைகளுக்கு உயிர் நாடியாகத் திழந்தவை வாசக இயக்கங்களே. எண்பதுகளில் எழுத ஆரம்பிக்கும்போது, இப்பொழுது உள்ளதுபோல் மின்னஞ்சல், பெஃக்ஸ் வசதி, குறுந்தகவல் சேவை, நினைத்தமாதிரத்தில்  பத்திரிகை ஆசிரியர்களோடு தொலைப்பேசி வழி உடையாடல் போன்ற வசதிகளெல்லாம் கிடையாது. எழுதுவோம், சென்றதா, அல்லது பாதிவழியிலேயே காணாமல் போனதா, என்பனவற்றையல்லாம்  ஆராயவே முடியாது. பத்திரிகையைப் பார்த்தால்  தான் உண்டு. அந்த காலகட்டத்தில் வாசக இயக்கங்கள்தான் இவற்றிற்கெல்லாம் பாலமாக இருந்தது.


வாசகர்களை எழுத ஊக்குவிற்பதற்கு வாசக  இயகங்கள் பெரும் பங்கு வகித்தன. குறிப்பாக எங்களின் வாசக வட்டத்தலைவர் என்று சொன்னால் அது  எம்.கே.சுந்தரம் அவர்களே . அவரின் அழைப்பின் பேரில் பத்திரிகை அலுவலகங்களுக்கும் சென்றுள்ளோம். அவரிடம் சில கடிதங்களை எழுதிக்கொடுத்து அனுப்புவோம். சும்மாலும் ஒரு காகிதத்தைக் கிழித்து, மனதில் பட்டதை எழுத்துப்பிழைகளோடு எழுதி அனுப்பினால், அதை, வாசகவட்டத் தலைவரான இவர் இன்னும் கொஞ்சம் அழகாக மெருகேற்றி, திருத்தி ,பத்திரிகைகளுக்குக் கொண்டு சேர்ப்பார். படைப்புகள் பத்திரிகைகளில் வந்தாலே பெரிய அதிர்ஷ்டம். இந்நிலை, தொடர்ந்து எழுதுவதற்கு ஊன்றுகோலாக அமைந்தது. 

இன்னமும், அந்த காலகட்டத்தில் எழுதிய வாசகர்கள் பலர்தான்  இன்றும் எழுதி முத்திரைப் பதித்து வருகின்றனர். புதிதாக எழுத்துலகிற்கு வருபவர்கள் கொஞ்சநாளிலேயே காணாமல் போய்விடுகின்றனர். இதை மாற்றியமைக்க இன்றைய வாசக இயங்கங்கள் முன் வரவேண்டும். நமது பத்திரிகைகளும் இன்றை சூழ்லுக்கு ஏற்ப மாறிக்கொண்டு, குறுந்தகவல் மின்னஞ்சல் பயன்பாடுகளையும் பெரிய அளவில் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.  கணினி யுகத்தில் நாம் போட்டிபோட்டுக்கொண்டு தரமான படைப்புகளை மக்களின் பார்வைக்குக்கொண்டு வரவில்லை என்றால்,  சிறப்பானவற்றை விரும்பும் இளைய தலைமுறையினர், நம் நாட்டு எழுத்துகளை புறக்கணித்துவிட்டு இணையத்திலேயே உலா வருகிற நிலை வரலாம். நான் சொல்வது கணிப்பு அல்ல, உண்மை. நடைமுறையும் அதுவே.   இளைய சமூதாயத்தின் தாய் என்பதாலும், சிலரின் இலக்கிய ஆர்வங்களைக்கூர்ந்து கவனித்தவள் என்பதாலும்  இதைச்சொல்கிறேன். மற்றபடி யார் எழுத்தின் மீதும் காழ்ப்பு இல்லை எனக்கு.

நான் எழுதினால், அவர் எழுதக்கூடாது, அவர் எழுதினால் நான் எழுதமாட்டேன் என்கிற சிறுபிள்ளைத்தனமெல்லாம் எனக்கு எப்போதுமே வந்ததில்லை. பாக்கியம் அம்மையார் எழுத்திற்கு மறுமொழி எழுதிவிட்டேன், இலக்கிய உலகில் கருத்து மோதல்கள் சகஜம், புகைகின்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அங்கேயும் இங்கேயும் மூட்டி விடும் சிலரை அடையாளங்காட்டியது இந்த சர்ச்சை.  அவர், நாடு போற்றும் ஒரு நல்ல பெண்படைப்பாளி என்பதை மனதார ஏற்கிறேன். புண்படும்படி எழுதியிருந்தால் மன்னியுங்கள் அக்கா. தொடர்ந்து படைப்புகளைக்கொடுங்கள். வாழ்க வளமுடன்.


இன்றைய தினக்குரலில் வந்த எனது கட்டுரை. வாசகர் விழா விமர்சனம்

நன்றி தினக்குரல். திரு.பி.ஆர்.இராஜன்.

சனி, செப்டம்பர் 22, 2012

ராட்டினம்

நேற்று இரவு ராட்டினம் என்கிற ஒரு படம் பார்த்தேன்.. ஆஹா போட வைத்த படம். அழகான காதல் போல் காட்டி, அதை இறுதியில் நாமெல்லாம் வெறுக்கும்படி செய்துவிட்டார் அந்த இயக்குநர். அந்த முதியவரின் இறுதிக்கண்ணீர் பல கதைகள் சொலதைப்போல..அற்புதம். - ஏன் சொல்கிறேனென்றால், மனதைக்குடையும் ஒரு கதை, பொழுதுவிடிந்தும் மனதைவிட்டு அகலவேயில்லை.

வெள்ளி, செப்டம்பர் 21, 2012

எனதானது..

கண் சிமிட்டல்

கண் சிமிட்டும்
கேமராக்களின் முன்
கலகலப்பாக இருக்கின்றோம்
காலம் கடந்த பொழுதுகள்
நம்மைப் பார்த்து
கண்சிமிட்டுவதற்காக..

%%%%%%%

நட்பு
தூசு படிந்த நீரை
பாதுகாத்துக்கொண்டிருக்கின்றேன்
மீன் செத்துவிடக்கூடாது
என்பதற்காக...

%%%%%%%

எனதானது

எனக்கென்ற பாணியில்
தொற்றிக்கொள்ளும் உன் பாணி
எனதானதை
உனதாக்கிக்கொண்டிருக்கின்றது.

%%%%%%%

விழுப்பம்


ஒழுக்கம் ஒளிந்துக்கொண்டு
நல்ல பெயர்
வாங்கிக்கொள்கிறது.

%%%%%%

இனி என்ன?

இரவு நன்றாகத்தான்
போய்க்கொண்டிருக்கு
இடையில் விரைவாக
உறக்கம் வருதே..

வேறொரு நான்

நான் தான் யோசித்தேன்
நான் தான் சொற்களை அடுக்கினேன்
நான் தான் எழுதினேன்
நான் தான் பெயர் வைத்தேன்
நான் தான் கவிதை என்றேன்
நானே வியந்தேன்
நானே புகழ்ந்தேன்
மறுவாசிப்பில்
வேறொரு நான்
முன்பிருந்த என்னை
எச்சரித்தேன்
இதுபோலும் இனி எழுதாதே...

வியாழன், செப்டம்பர் 20, 2012

பிரசுரமான எனது படைப்புகள்


எனது ( கிட்டத்தட்ட இருபது ஆண்டு கால அனுபவம்) எழுத்துலக பயணம், கற்கள் முட்கள் நிறைந்தவை.  அப்படி என்னதான் செய்துவந்துள்ளோம்!? என எனக்குள் திடிரென்று ஒரு தேடல் பிறந்தது. அலசலுக்குத் தயாரானேன்.

எனக்கு இருக்கின்ற ஒரு நல்ல பழக்கம், நான் எழுதி பிரசுரமான படைப்புகள், என்னைப்பற்றிய செய்திகள் எதேனும் பத்திரிகைகளில் அச்சாகி பிரசுரமாகியிருந்தால், அவற்றை உடனே கத்தரித்துச் சேகரித்து வைத்துக்கொள்வேன். சிலது தவறியிருக்கலாம், ஆனாலும் பெரும்பாலும் சேகரித்தே வைத்துள்ளேன்.  அப்படி சேகரித்து வைத்துள்ளதை, வகை வாரியாகப் பிரித்து இங்கே பதிவு செய்துள்ளேன். இது என்னைப்பற்றிய ஓர் அலசல்தான், தம்பட்டமெல்லாம் கிடையாது. மேலும் இந்த எண்ணிக்கை முற்றுப்புள்ளியும் அல்ல, இது தொடரும் வாழும் காலம் வரை. பத்திரிகைகளில் இல்லாவிட்டாலும் வலைப்பூவில் எனது பதிவுகள் தொடரும். இத்துறையில் மட்டும் அலுக்காத நிலையில் ஆண்டவன் என்னைப் படைத்து விட்டான்.


எனது படைப்புகள் - (மன்னிக்கவும் வருடம் மற்றும் தேதிகள் தெரியவில்லை, படைப்புகளில் அதை எழுதிவைக்கத் தவறிவிட்டேன்)


சிறுகதைகள்

1. பூஜைக்கு வந்த மலர்
2. கதை சொன்ன கன்னி - தூதன் இதழ்
3. அண்டை வீட்டுக்காரர் -  மக்கள் ஓசை
4. நினைக்கத்தெரிந்த மனமே - தமிழ் நேசன்
5. சாந்தியிடம் சாந்தி - மக்கள் ஓசை
6. சகிப்புத்தன்மை - மலேசிய நண்பன்
7. கரிசனம் - மக்கள் ஓசை
8. கதவைத்திற... மலேசிய நண்பன்
9. பாலிக் கம்போங் - தீபாவளி சிறுகதை - மக்கள் ஓசை
10. பரீட்சைக்கு படிக்க்ணும் -  மக்கள் ஓசை
11. அவர்களுக்கு வயதானால் - மலேசிய நண்பன்.
12. தோள் கண்டேன் - தென்றல் வார இதழ்
13. இயந்திர வாழ்வுதான் - நம்நாடு
14. இப்போ என்ன? - மின்னல்
15. அந்த தோட்டக்காரி - தமிழ் நேசன்
16. தீபாவளி சிந்தனை - மலேசிய நண்பன்
17. கொஞ்ச நேரம் நில்லு - மக்கள் ஓசை
18. ஆபிஸ் - மக்கள் ஓசை
19. உன் குரல் கேட்டால் -  மின்னல்


குட்டிக்கதைகள்/ நிமிடக்கதைகள்/கடுகுக்கதைகள்

1.மூடுவிழா விற்பனை - மக்கள்  ஓசை
2.மாற்றம் - மக்கள் ஓசை
3.பேச்சுக்கலை - தென்றல்
4. முடியாது - மக்கள் ஓசை
5. தாய் அன்பு -  மக்கள் ஓசை
6. ஒப்பிடாதிங்க -தென்றல்
7. வார் ரொட்டி - தென்றல்
8. கலர்கலராய் கனவு - தென்றல்
9. என்னங்கடா சேவை - தென்றல்
10. ராங் நம்பர் - நிமிடக்கதை தென்றல்
11. அது - மலேசிய நண்பன்
12.சினிமாவில் என் நகைச்சுவை - தென்றல்
13.மகனோடு வாழ்க்கை - தென்றல்
14.மூன்றாவது எறும்பு - தென்றல்
15.சைக்கிள் கேப் - தென்றல்
16.நீண்ட ஆயுசு - தென்றல்
17.அந்த ஒன்னுதான் - தென்றல்
18. நானிருக்கேன் கவலைப்படாதே - தென்றல்
19. எனக்குள் சில ரகசியங்கள் - தினக்குரல்
20. ஐ மிஸ் யூ - மின்னல்
21. நகவெட்டி - தென்றல்
22. மின் குழல் - தென்றல்
23. மூன்று பெண்கள் சேர்ந்தால் - தென்றல்


கட்டுரைகள்

1. இது பெண்களுக்காக - மகளிர் கட்டுரை - தென்றல்
2. அழகிற்கு அழகூட்டுவது எப்படி? - மகளிர் கட்டுரை - மலேசிய நண்பன்
3. ஆள்பாதி ஆடை பாதி - மகளிர் கட்டுரை. - மலேசிய நண்பன்
4. பண்பாட்டு கூறுகளும் நாமும் - மகளிர் கட்டுரை - மலேசிய நண்பன்
5. செய்துதான் பாருங்களேன் - மகளிர் கட்டுரை -  மலேசிய நண்பன்
6. இலக்கியச்சோலை - விமர்சனக் கட்டுரை - தமிழ் நேசன்
7. மாதர் தம்மை கேலி பேசும் மூடர் வாயை மூடுவோம்- மலர் மாத இதழ்
8. முருங்கை’னா சும்மாவா - மகளிர் கட்டுரை - மலேசிய நண்பன்
9. இரவிந்திரநாத் தாகூர் கவிதைகள் - அறிமுகக் கட்டுரை - தென்றல்
10.பிரபலமாகிப்போன சொல் வழக்கங்கள் - தினக்குரல்
11. இயம்பிட வார்த்தைகள் இல்லா சுயம்பு லிங்கம் - பயணக்கட்டுரை  மக்கள் ஓசை
12. கலகலக்கவைத்த கலைஞன் கோயாமணியம் (குடும்ப உறுப்பினர் மறைவு) - இரங்கல் செய்தி - மக்கள் ஓசை
13. கெல்லி ஸ்மித் - கனவுக்கோட்டை - பயண அனுபவக்கட்டுரை - தமிழ் நேசன்
14. இலக்கியவானில் ஒரு நிலா - இரங்கல் செய்தி - தமிழ் நேசன்
15. சின்ன நடிகவேள் மரணம் (ரகுவரன்) - இரங்கல் கட்டுரை - தமிழ் நேசன்
16. இறையன்பு ஓர் அறிமுகம் -  தமிழ் நேசன்


தொகுப்பு பதிவுகள்

1.ஓஷோவின் தேன் துளிகள் - மக்கள் ஓசை
2. ஓஷோவின் பார்வையில் - மக்கள் ஓசை
3. ஓஷோவின் தேன் துளிகள் - தென்றல்
4. ஒஷோ ஒர் அறிமுகம் - தத்துவக்கட்டுரை தென்றல்


சிறுகதை விமர்சனம்

1.முதியோர் எண்ண ஓட்டம் - தமிழ் நேசன்
2. இலக்கிய உலகம் உருப்பட்ட மாதிரிதான் - மலேசிய நண்பன்
3. வெற்றி பெற்ற படைப்பு - தமிழ் நேசன்
4. நல்ல சிறுகதை `துணைவி’ - தமிழ் நேசன்
5. சிறுகதைகளுக்குச் சன்மானம்- மலேசிய நண்பன்
6. போலி முகமூடிகள் - தென்றல்
7. படைப்பின் வெற்றி - தென்றல்
8.அனுபவ எழுத்தாளரின் சிறுகதையா? -  மக்கள் ஓசை
9.கணேசன் அப்பா ஆமை மண்டோர்- தமிழ் நேசன்
10.தொட்டுப்பார்க்கவா? - மக்கள் ஓசை
11.கவராத சிறுகதை - மக்கள் ஓசை
12. இலக்கிய பணியும் வானொலி அறிவிப்பும் -மக்கள் ஓசை
13. சிறுகதை திறனாய்வு - மக்கள் ஓசை
14. நகைச்சுவை கலந்த போதனை - மலேசிய நண்பன்
15. பழுதான விதை - மலேசிய நண்பன்



கவிதைகள்

1.குழந்தை- மக்கள் ஓசை
2.தழும்பு - தமிழ் நேசன்
3.அனுபவம் - தமிழ் நேசன்
4. பிரிவு,காதல், இதயம் - மக்கள் ஓசை
5. புரியவில்லை - தென்றல்
6. தாய்,ரம்மியம்,காதல் - மக்கள் ஓசை
7. மனசாட்சி - தென்றல்
8. முடியவில்லை - மக்கள் ஓசை
9. மனிதன் இல்லை, பயமும் இல்லை - மக்கள் ஓசை
10.கருணை காட்டு - மக்கள் ஓசை
11.ஏன் பெற்றாய்? - தமிழ் நேசன்
12.எனக்கு ஒன்று - மக்கள் ஓசை
13.அகத்தின் அழகு - செம்பருத்தி
14.பெண்ணுரிமை - தென்றல்
15.மனசு - நயனம்
16.விவாகரத்து - நயனம்
17.கருவறை - செம்பருத்தி
18.நிலையில்லா வாழ்வு - நயனம்
19.அன்னை - தென்றல்
20.பூஜிக்கிறேன் - நயனம்
21.ஈகோ -தமிழ் நேசன்
22. படிக்காமல் - செம்பருத்தி
23. மாற்றம் - நயனம்
24.சொன்னதும் செய்ததும் - தென்றல்
25.புதுமைப்பெண் - தென்றல்
26.மனித மனங்கள் - நயனம்
27.பெண்மை - மக்கள் ஓசை
28.தூறல்கள் - மின்னல்
29.மெய்காதல் - தென்றல்
30.காதல் ஆராய்ச்சி - தென்றல்
31.நவம்பரில் நாங்கள் - தென்றல்
32.தந்தையே தியாகி - மக்கள் ஓசை
33.ஆஸ்கார் விருது - மக்கள் ஓசை
34. இப்படிச்செய்ய எப்படியம்மா மனசு வந்தது! - தென்றல்
35.அன்னையின் தியாகம் - தமிழ் நேசன்
36.கண்ணீரில் கரை சேர்ந்தேன் - தமிழ் நேசன்



தீபாவளி மலருக்கான எனது பங்களிப்பு

1.தீபாவளி பரிசு - தமிழ் நேசன்
2.ஷோப்பிங் ரகளை - மக்கள் ஓசை
3.விடிந்தால் தீபாவளி - தமிழ் நேசன்
4.தீபஒளியும் தீபாவளி மலரும் - மக்கள் ஓசை
5.கேள்வி பதில் - தீபாவளி கலாட்டா - தென்றல்
6.மறக்கமுடியாத தீபாவளி - தமிழ் நேசன்
7.இதுவே இன்பத் தீபாவளி - மலேசிய நண்பன்
8. மீண்டும் வருமா அந்த நாள் - மலேசிய நண்பன்
9.தீபாவளி விருந்திற்குப் போகலாம் வாங்க - தீபாவளி கலாட்டா - தென்றல்


வாசகர் களம்

1.ஓஷோவின் நூல்கள் ஒர் அறிமுகம் - தமிழ் நேசன்
2. என்னைக் கவர்ந்த பாடகர்- ஏசுதாஸ் - தமிழ் நேசன்
3. உள்ளூர் பாடகர் திலிப்வர்மன் - தமிழ் நேசன்
4.நெஞ்சைக்கவர்ந்த டி.எம்.எஸ் - தமிழ் நேசன்
5.என்னைக் கவர்ந்த குற்றவியல் துறை - தமிழ் நேசன்
6. கன்னிமாடம் நாவல் விமர்சனம் - தமிழ் நேசன்
7. வட்டிமுதலைகளிடம் கடன் பெறுவது சிறப்பா? - தமிழ் நேசன்
8. என்னைக்கவர்ந்த புதிய பாடல்கள் - தமிழ் நேசன்
9. இன்றைய திரைப்படங்கள் கவர்கின்றனவா? - தமிழ் நேசன்
10.சினிமா ஒரு விழிப்புணர்வு மையம் - தமிழ் நேசன்
11. நம் நாட்டில் மொழி கலப்பு தவிர்க்கவியலாது - மலேசிய நண்பன்
12.அழகான கவிதைவரிகள் பழைய பாடல்கள் - தமிழ் நேசன்
13.கலாச்சார சீரழிவிற்கு மனமே காரணம் - தமிழ் நேசன் (50வெள்ளி பரிசு பெற்ற கட்டுரை)
14.புதுத்தெம்பை தருபவை டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் நூல்கள் - தமிழ் நேசன்


தொடர்கள் (மலேசிய நண்பன்)...

ஓஷோவைப் பற்றிய ஆன்மிகத் தேடலில் நான், தொடராக பதினைந்து வாரங்கள் பல எதிர்ப்புக்குரல்களைக் கடந்து வந்த கட்டுரைகள் இவை.:-

1ஓஷோவின் வாழ்வியல் உண்மை
2.எறும்புகள் தற்கொலை செய்து கொள்வதில்லை 
3.காயம் பட்ட மக்களை காமம் காயப்படுத்தி விட்டது
4.நிரந்தரமான நிரந்தரம் வாழ்க்கை
5. கோபம் பலமா?பவீனமா?
6.கட்டொழுங்கு இல்லையென்றால் விழிப்புணர்வு வராது
7. கடையைப்பாருங்கள் வீடு சரியாகிவிடும்
8.அழகே நீ யார்?
9.பெண்ணை நேசி, ஆராயாதே
10.காதலே தெய்வீகக் காதலே
11.அன்பு,நேசம்,காதல் - நேசிக்கத்தெரியாதவர்களின் வாழ்க்கை
12.எல்லோருமே உயிர்த்தன்மையுள்ள மனிதர்களா?
13.ஓஷோவின் பார்வையில், அறிவுப்பூர்வமும் உணர்ச்சிப்பூர்வமும்
14. அன்பின் நிலை இரண்டு
15. மனம் என்று ஒன்றுமில்லை

மலர் மாத இதழில் .
1. மூடப்பழக்கவழக்கங்களும் விஞ்ஞான விளக்கங்களும் - ஆய்வுத் தொடர்


சர்ச்சைக்குள்ளான எதிர்வினைப் பதிவுகள்

1.விமர்சனத்திற்குக் கிடைத்த பரிசு - மலேசிய நண்பன்
2. மின்னலே ஓ மின்னலே - (ஆசிரியரின் திட்டுதலோடு) தென்றல்
3. குண்டுச்சட்டி நிருபர்கள் - தென்றல்
4. குறைகளைச் சுட்டுங்கள்- வெட்டிவேலை வேண்டாமே - மக்கள் ஓசை
5. தெளிவில்லாத அச்சும் கோணல் முகங்களும் - பத்திரிகை தரம் குறித்து எனது குமுறல் - மக்கள் ஓசை
6. தனித்துவாழும் தாய்மார்களுக்கு மாநகர் வீடு கிடையாதா? - மக்கள் ஓசை
7. சிந்திக்கவைக்கும் படைப்பாளன் தானே எழுத்தாளன் - எதிரொலி தென்றல்
8. ஆண்களே காரணம்- தென்றல்
9.பெண்கள் பேருக்காக எழுதுகிறார்களா? - எதிரொலி தென்றல்
10. கிண்ணம் பாதி காலியா அல்லது பாதி நிறைந்துள்ளதா? - கண்டனக்கடிதம் - மலேசிய நண்பன்
11.எழுத்தின் விவேகம் - எதிரொலி தென்றல்
12. ஆதாரமேயில்லா பழிச்சொல் - எதிரொலி தென்றல்
13. இனி வேகாது இந்த பருப்பெல்லாம் - எதிரொலி தென்றல்
14. காழ்புணர்ச்சியை அடையாளங்காண்க - மலேசிய நண்பன்
15. மொழிபெயர்ப்பில் அசலைப்படித்துவிட்டு கருத்து கூறுவதே சிறப்பு - மலேசிய நண்பன்
16. நல்ல படைப்புகளுக்கு ஊக்கம் கொடுப்போம் - மலேசிய நண்பன்
17. வானொலி பெயரைப் பயன்படுத்தி லாபம் தேடும் அறிவிப்பாளர்கள் - மலேசிய நண்பன்
18. பெண்ணுரிமையும் சுதந்திரமும் - மலேசிய நண்பன்
19.தமிழை பிடித்துக்கொண்டு தமிழ் மரபை புறக்கணிப்பவர்கள் - மக்கள் ஓசை
20.யார் எழுத்தாளர்? - மக்கள் ஓசை
21.இதுதானா அரசியல்? - தென்றல்
22.பெண்களை இழிவு செய்யாதே (வானொலி நிகழ்ச்சி) - மலேசிய நண்பன்
23. வானொலிநாடகங்களும் நடக்கும் கூத்துகளும் - தினக்குரல்
24.இலக்கியமும் குழாயடி சண்டையும் - தென்றல்
25.எனது பதிவுகளில் வசீகரம் அதிகம் - எதிரொலி தென்றல்
26.சரக்கே இல்லாத கோணாங்கிகள் - எதிரொலி தென்றல்
27.கவிதை கருவிற்கா பஞ்சம்? பெண்களை ஏலம் போடுகிறார்கள் - எதிரொலி தென்றல்
28.மனம் நிறைய அழுக்கு - குமுறல் கட்டுரை -  தென்றல்


நேர்காணல்

1.ஷா ஆலம் விஜயாவுடன் ஒரு நேர்காணல் - தென்றல்
2.புனைவுகள் ஆய்வுகளின்றி படைக்கப்படுகிறதா? விஜயாவுடன் ஒரு நேர்காணல் - தினக்குரல்
3.முழுமை பெறாத சிற்பங்கள் - விஜயாவிடம் ஒரு விளக்கம் - நேர்காணல் மலர் இதழ்


ஏணைய இதழ்களில் என் பங்கேற்புகள்

அதீதம் - தமிழ்நாட்டு இணைய இதழ்
வல்லினம் - இணைய இதழ்
மௌனம் - கவிதை மாத இதழ்
The Malay Mail -


பட்டியலில் இடம்பெறாத இன்னும் நூற்றுக்கணக்கான விமர்சன, பாராட்டு, வாசகர் கடிதங்களும்..  சேகரிக்காமலும், தொலைந்துபோன பதிவுகளும், சேகரித்து வைத்து, என்னை நோக்கி வந்துள்ள மிக மோசமான விமர்சனங்களும், அற்புதமான பாராட்டுகளும் இதில் அடங்கா.


நன்றி வாசித்தமைக்கு.....
அன்புடன் - ஸ்ரீவிஜி