வியாழன், ஜனவரி 26, 2012

எனது வினா.?

வாய்ப்பு கிடைக்கும்
போதெல்லாம்
எழுதுகிறார்கள்
முத்திரை பதிக்க

ஒரு வரி
இரு வரி
பல வரிகள்

ஒரே ஒரு
வரியில் இருந்தால்
’குறிப்பு’
என்கிறார்கள்

சட்டை

நான் சட்டை
செய்யாதபோதும்
என்னைச் சதா
தழுவிக்கொண்டே இருக்கிறது
ஒர் உடல்
இரு கைகள்

மன வெ(வ)டிப்பு

கோடுகள்
நெளிந்து நெளிந்து
வட்டமாகி வடிவமாகி
அழகான
ஓவியமானது

அதைப்பார்க்கப் பார்க்க
பொங்கினான்
பதற்றமானான்
பரிதவித்தான்
பார்வையாளன்

அது வெறும்
ஓவியம் தான்
ஏன் கண்ணாடி போல்
என் பிம்பம் காட்டுகிறது!?

ஓவியனும்
திகைத்தான்
அது தன் உருவத்தை
இன்னும் கம்பீரமாக
காட்டிக்கொண்டிருந்தது.

புதன், ஜனவரி 25, 2012

கல்யாணம் பண்ணிக்கலாமா?

கல்யாணம் பண்ணிக்கலாமா?? 

: உன்னை ரொம்ப பிடிக்கும். 
:அப்படியா, எனக்கும் தான். 

:உன்னோடு யார் பேசினாலும், எனக்கு பொறாமை வரும். 
:ஓ என் மேல், எவ்வளவு பிரியம் உனக்கு! 

:அன்பே நீ என் உயிர்....! 
:ஐயோடா... நான் கொடுத்து வைத்தவள். 

:உன்னைக் கட்டிப்பிடித்து முத்தமிடட்டா? 
:என்ன.. புதிதாய் கேட்கிறாய்? இப்போது கூட இடுப்பைத்தானே கட்டிக்கொண்டிருக்கின்றாய்...! 

:உம்மா.. ஐ லவ் யூ.. 
:இந்த, ஐ லவ் யூ தான் எனக்குப்பிடிக்கல!! 

:ஏன், நான் ஐ லவ் யூ சொல்லக்கூடாத!? 
:சரி எதையாவது சொல்லித்தொலை... 

:சரி, சரி கோபம் வேண்டாமடி.. இன்று புதிதாய் ஒன்று சொல்லட்டுமா? 
:புதிதாகவா? என்ன பீடிகை!!! 

:நாம ரெண்டு பேரும் கல்யாணம் செய்துகொள்ளலாமா? 
:அடிப்பாவி.. பாதகி, கல்யாணம் கட்டிகிட்டு என்ன செய்வதாம்???? 
...........நீயும் பெண்தானே!!!!!!!!!!!!!

உறக்கம்

எவ்வளவு தாமதமாக 
வந்தாலும், 
உன் வரவு வசந்தமே.

நல்ல நண்பர்

எல்லாவற்றிற்கும் 
நீயே நாயகன்.. 
ஆனாலும்,
அடிக்கடி வந்து போகும் 
ஒரு பார்வையாளன்


எல்லாவற்றிற்கும் 
நீயே நாயகன்.. 
ஆனாலும்,
அடிக்கடி வந்து போகும் 
ஒரு ரசிகன்


எல்லாவற்றிற்கும் 
நீயே நாயகன்.. 
ஆனாலும்,
அடிக்கடி வந்து போகும் 
ஒரு வில்லன்


எல்லாவற்றிற்கும் 
நீயே நாயகன்.. 
ஆனாலும்,
அடிக்கடி வந்து போகும் 
ஒரு அசுரன்


எல்லாவற்றிற்கும் 
நீயே நாயகன்.. 
ஆனாலும்,
அடிக்கடி வந்து போகும் 
ஒரு கலைஞன்

மறந்து விடவும்


என் முகம் நினைவில் இருக்கா?
மறந்து விடவும்.

நான் யார் என்று தெரிந்திருந்தால்
தயவு செய்து மறந்து விடவும்.

இன்னார் மனைவி, மகள், தாய், மருமகள் என
எப்போதாவது நான் சொல்லியிருப்பேன்..
ப்ளீஸ் மறந்து விடவும்..

என்ன சொன்னேன், எப்படிச் சொன்னேன்..பேசினேனா?
என் குரல் கேட்டதுண்டா? ஞாபகம் இருக்கா?
மறந்து விடவும்.

என் உயரம், எ(இ)டை, நிறம், பதவி,பட்டம், ஆடம்பரம்
ஆணா பெண்ணா?? எதாவது உங்களுக்குத்தெரிந்திருந்தால்...
மறந்து விடவும்..

ஏதேனும் உளறல்கள், திட்டுதல்கள், கோபம், பந்தா பகட்டு..நிச்சயம் இருந்திருக்கும்..
மறந்து விடவும்.

இனி எழுத்தால்,சொற்களால் என்னை
அடையாளப் படுத்திக் கொள்ளப் போகிறேன்
யார் என்று காட்டிக்கொள்ளாமல்...

மறுபிறவியில்