வியாழன், நவம்பர் 24, 2011

ஏன் இப்படி???

தமிழ் நாட்டிலிருந்து எழுதப்பட்டு வரும், ஒரு சில...ம்ம்ம் இல்லை பெரும்பாலான சுயசரிதைகளைப்படித்தோமானால், (நான் படித்தவரை....1234 ) அவர்கள் பிரபலமானவர்களாக , ஏற்கனவே நல்ல திறமைசாலிகளாக இருப்பார்கள், நிறைய படித்தவர்களாக இருப்பார்கள், நுணி நாக்கில் ஆங்கிலம் இன்னும் கூடுதலாக சில, பல மொழிகளை அறிந்தவர்களாகவும்.. தமிழ், சொல்லவே வேண்டாம் எழுத்தும் சரி பேச்சும் சரி அருவிபோல்....! 
ஆனால், அவர்களைப்பற்றி அவர்கள் எழுதும்போது.. நான் பொறுக்கி, நான் குடிகாரன், நான் கெட்டவன் ரௌடி, கோபக்காரன், படிப்பே வராது, பாமரன், ஆசிரியர்களைப் பிடிக்காது, புத்தகத்தைத்தூக்கி எரிந்து விடுவேன், மாட்டுக்கொட்டகையில் தூக்குவேன்.. மொத்ததில் நான் ஒரு உதவாக்கரை என்று தான் எழுதுகிறார்கள்... ஏன்?
அந்த சுயசரிதையைக் கூட ரொம்ப அழகாக, சுவைப்பட, ரசிக்கும் படி சுவாரஸ்யமாக எழுதியிருப்பார் அந்த பிரபலமானவர்.. ஆனால் தான் ஒரு உருப்படாதவன் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பார். இது தன்னடக்கமா? எனக்கென்னவோ, இதுதான் சுயவிளம்பரம் போல் தோன்றுகிறது. படித்தவரென்றால் தாராளமாக படித்தவர் என்று சொல்லலாமே, இதிலென்ன மூடு மந்திரம்???? இப்படி ஒரு சில பிரபலங்கள் சொல்லித்திரிவதால் தான், பள்ளிக்கூட பக்கமே போகாதவர்கள், நான் ஒரு முட்டாள் என எவ்வளவு பெருமையாக தமாஷாக சொல்லித்திரிகிறார்கள் தெரியுமா.!? ஷாப்ப்ப்பா தாங்களடாசாமி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக