வியாழன், நவம்பர் 24, 2011

கேள்விக்குறியாய்

எதேதோ புலம்பல்கள்
எல்லாம் அறுவைகள் போல
எனக்கே தெரியாமல்
நகலும் நிழலாகி நிஜமானது 
கவிதைகளாக...... நானா????

இதுவும் விழிப்பு நிலையல்ல
கடந்து போகவிருக்கும்
விடியா பொழுதின் 
தொடக்கத்தின் சுடர்விளக்கு

எதிர்ப்பார்ப்புகளின் பின்னணியில்
எழுத்துக்களின் முழுவடிவமும்
ஏக்கத்தின் வெளிப்பாடாய்....
மீண்டும் எதிர்ப்பார்ப்பாய்..
நானா எழுதியது?

இந்த விச்சித்திரமான
பாதையில்
எனக்கு எப்படி வழி கிடைத்தது?

நானோ குதிக்கவில்லை
யாரோ தள்ளியுள்ளார்கள்
என்னை என் படைப்புக்குள்..

காகிதங்கள் ராக்கெட் ஆனது போல்
எனது படைப்புகளில்
உலா வருகிறேன் விண்ணில்

எனது படைப்புகளின்
மீள் பார்வையில்......!!!!!!!!!!
யார் என்னை இப்படியெல்லாம்
எழுத வைத்தது????????????????

நான், என்னை 
தொலைத்து 
எழுதப்பட்டவைகளில்
உயிர் பெற்றேன்

எப்படி
எப்படி
எப்படி

.
!
?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக