வியாழன், டிசம்பர் 29, 2011

ஓஷோவின் தேன் துளிகள்

எனது தொகுப்பு- மக்கள் ஓசையில் வந்தது (2006)

1. உங்களைப் பற்றிய அதிக அக்கறையே, உங்களுக்கு வரக்கூடிய மிகப்பெரிய நோய்.

2. உண்மையை தரிசியுங்கள், விளக்கமளிக்கத்தேவையில்லை.

3. அழாமல், அஞ்சாமல், துணிவுடன், அன்பாகவும் ஆடியும் கொண்டாடியும் வாழ்பவர்களுக்கே மரணம் அழகானது.

4. அநியாயத்திற்குள் நுழையத் தயாராய் இருப்பவர்களால் மட்டுமே வாழ்வைப் புரிந்துக்கொள்ள முடியும்.

5. அறியாததிற்குத் தயாராக - அறிந்ததிற்கு இறந்தவராய் ஆகுங்கள்.

6. வாழ்வு சமயத் தன்மையோடு இருக்கவேண்டும். ஆனால் சமயம் வாழ்க் கூடாது. தெய்வத்தன்மையே அவசியம். தெய்வம் அவசியமில்லை.

7. தொண்டு செய்தல் கேவலமான சொல். என்னிடம் உள்ளதை பல வழிகளில் பகிரிந்துக் கொள்கிறேன் என்பதுவே சிறந்தச் சொல்.

8. குழந்தையாய் இருங்கள். சிறுபிள்ளைத்தனம் வேண்டாம்.

9. உண்மையாய் இருங்கள். அஞ்சாமையை ஊட்டும்.

10. பிராத்தனை ஒரு மகிழ்ச்சியூட்டும் விளையாட்டு. கோவிலுக்குச் செல்பவர்கள் கடினமானவர்களாக மாற வேண்டிய அவசியமில்லை.

11. ஆழமாய் வாழுங்கள், முழுமையாய் வாழுங்கள். அனைத்தையும் அனுபவித்து வாழுங்கள். அப்போதுதான் விழத்தயாராய் இருக்கும் கனிந்த பழம்போல், மரணம் வந்து உங்களைத் தழுவும் போது, நீங்கள் தயாராக இருக்க முடியும்.

12. ஆதாரப்பூர்வமாக வாழுங்கள். முகமூடியை அகற்றுங்கள். அவை உங்களது இதயத்தை அழுத்தும் சுமை. பொய்மையானவற்றையெல்லாம் விடுங்கள். வெளிப்படையாக இருங்கள். அது சிரமம் கொடுக்கக் கூடியது என்ற போதிலும், அந்தச் சிரமம் அருகதை உள்ளதே. ஏனெனில் அந்தச் சிரமத்திற்குப்பிறகு நீங்கள் பக்குவப்பட்டிருப்பீர்கள். அதன் பிறகு ஒவ்வொரு கணமும் வாழ்வு அதன் புதுமையை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும்.

13. புரிந்துக் கொள்ளக் கூடிய மனிதனே நல்ல மனிதன். ஒரு நல்ல மனிதன் என்பவன் எதையும் சிந்திக்கும் உணர்வோடு, விழிப்புடன் இருப்பவனே. விழிப்புணர்வு ஒன்றே மதிப்பிற்குகந்தது. மற்ற எல்லாம் அர்த்தமற்றவை.

14. நிர்வகிக்கக் கூடியதல்ல அன்பு, அது தானாகவே நடக்கும் ஒரு நிகழ்வு. அன்பை நிவகிக்க முயன்றால், அந்தக் கணத்திலேயே அது இல்லாமல் போய்விடும்.

நன்றி திரு. இராஜேந்திரன் ஞாயிறு பொறுப்பாசிரியர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக