வியாழன், டிசம்பர் 29, 2011

மனிதன் இல்லை-நோய் பயமுமில்லை

H1N1 பயங்கரம் பற்றிய அறிவிப்பு எங்கு பார்த்தாலும். எங்க ஆபிஸிலும் அறிக்கைகள், முக மஸ்ஃக் கள் வினியோகம் கட்டுக்கட்டாக. அரசாங்கமும் செய்தி வழி, அதன் பயங்கரத்தைப் போதித்த வண்ணமாக..

அப்போது எழுதிய எனது கிறுக்கல் இது - மக்கள் ஓசை 2008


நாலாப் பக்கமும் மரம்
நடுவில் நான்

வானம் தெரியவில்லை
வானவில் போல்
வர்ணக் கம்பளமாக
இலைகள்
கதிரவனையே மறைத்து..

கிளைகளை உரசவிட்டு
சேட்டைகள் செய்யும்
குரங்குகளும் அணில்களும்
ஒரு புறம்..

சல சல சத்தம்
மிக அருகில்
அது அருவியல்ல
எங்கிருந்தோ ஓடிவரும்
கால்வாயின் நீரோட்டம்

எதையோ வேண்டி
காகம் கரைவது கூட
குயிலின் கானமாக
காதுகளுக்கு இனிமை

நனைந்தும் நனையாத
மரங்களிலிருந்து
வடியும் நீர் கூட
இனம் புரியாத
இதம்..

முக கவசத்தை அகற்றி விட்டு
மூச்சை இழுத்து
சுதந்திரமாக
சுவாசித்துக் கொண்டிருந்தேன்
H1N1 பயமில்லாமல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக