திங்கள், நவம்பர் 28, 2011

குழந்தை மனது

எனக்கு குழந்தைகளை மிகவும் பிடிக்கும்..கைக் குழந்தைகள் அல்ல.. கொஞ்சம் பேசனும் தக்கா புக்கான்னு.. 

எங்க பக்கத்து வீட்டுப்பைய்யன் மூனு வயது.. அவ்வளவு காதல் என் மேல்.. என்னைப்பார்த்துட்டா போதும், போலாம் போலாம் என அடம்பிடிப்பான் அவங்க அம்மாவிடம்..

வந்துட்டா போக மாட்டான்.. நாட்காலியின் கீழ் ஒளிந்துக்கொண்டு அழுவான்.

இப்படித்தான் ஒரு நாள், நானும் அவனுடைய அம்மாவும் காத்தார வெளியே அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தோம்.

அப்போது அந்தப் பைய்யன் (கோகுல்) சைக்கில் விளையாட்க்கொண்டிருந்தான். நான் துணிகளைக் காயப் போடும் ட்ரொலியின் (trolley) கீழே புகுந்துப் புகுந்து..

திடீரென்று அதில் தொங்கிக்கொண்டிருந்த சில ஹெங்கர்களை (hangers) தூக்கி தூர எரிய ஆரம்பித்தான்.. அவனின் அம்மா..ஏய் என்ன பண்ற, அண்டி (நான்) அடிக்கப்போறாங்க, என்றார்.

அதற்கு அவன் சொன்னான் (ஆங்கிலத்தில் தான்).. இதோ பாரு அம்மா, இந்த ஹெங்கர் எல்லாம் அங்கும் இங்கும் உடைந்திருக்கு அது அண்டிக்குத்தேவைப் படாது, அதான் நான் உதவி செய்கிறேன் என்றான்..

மிகுந்த அற்வாளியாய் வருவான் கோகுல். ஏன்னா ஹெங்கர்கள் உடைந்திருப்பதை நானே கண்டுப்பிடிக்கவில்லை... வேலை முடிந்தால் போதும், அப்படித்தான் நாம்.

அதான் குழந்தை மனது என்பது....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக