திங்கள், நவம்பர் 28, 2011

எல்லாம் உனக்காக

முகர்ந்து பார்த்தது
மோதிப்பார்த்தது
சீண்டி பார்த்தது
சீறியும் பார்த்தது
கத்திப்பார்த்தது..

இரண்டு மூன்று முறையல்ல
பல முறை சுற்றி
வலம் வந்தும் 
செய்வதறியாது
அமைதியாக திரும்பிச் சென்றது
பூனை...

அசைபவரிடம் 
ஆசை கொள்வது தான் 
உயிர்களின் இயல்பு(போ)!?

சிலவேளையில்
உன் முன்னே, நான்
அசைந்து கொண்டே... 
செத்த எலியாக...

உன் அமைதியான
சீண்டல் வேண்டி....!!!

வலிகளில் உதிக்கின்ற
சில கிறுக்கல்களுக்காக

அதுவும் உனக்காக....!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக